சென்னை மயிலாப்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகைவரத் தொடங்கியதையடுத்து ஓட்டுநர் கீழே இறங்கியுள்ளார்.
இந்நிலையில் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.