கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த பிரவீன் குமார், தனது குடும்பத்தினருடன் வல்லம் பகுதியில் இருந்து வீடு நோக்கி சென்றுள்ளார்.
அப்பொழுது ராமநத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது டயர் வெடித்து கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 13 வயது சிறுமி உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஐந்து பேர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.