குமரி மாவட்டம் மங்காடு பாலம் அருகே பொதுமக்களுக்கு உப்பு கலக்காத தண்ணீர் வழங்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. தேங்காய்பட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றுடன் கடல்நீர் கலந்து ஆற்றுநீர் உப்பாக மாறியது.
இதனையடுத்து, மங்காடு ஊராட்சி தலைவர் சுகுமாரன் முயற்சியால், மங்காடு பாலத்தின் அடியில், ஆற்றின் குறுக்கே கற்கள் போட்டு தடுப்பு அமைக்கப்பட்டது.
இதனால், உப்பு கலக்காத தண்ணீர் வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.