மதுரை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள 280 பள்ளிகளைச் சேர்ந்த, ஆயிரத்து 300 -க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்கள் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், போக்குவரத்து துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, அவசர காலங்களில் அளிக்க வேண்டிய உயிர்காக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.