வேலூர் மாவட்டம், பத்தலப்பள்ளியில் குரங்குகளின் தாகம் தீர்க்க, சொந்த செலவில் சிமெண்ட் தொட்டிகளை வாங்கி நீர் நிரப்பும் நபரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பத்தலப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வனப்பகுதியில் உள்ள குரங்குகள், கோடையின் காரணமாக குடிக்க தண்ணிரின்றி அவதிப்பட்டு வந்துள்ளன.
இதனைக் கண்ட பேரணாம்பட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவர், தனது சொந்த செலவில் சிமெண்ட் தொட்டிகளை வாங்கி நீர் நிரப்பி குரங்குகளின் தாகத்தை போக்கி வருகிறார். அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.