தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 313 கன அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, பாலமலை, பண்ணைக்காடு, பெருமாள் மலை, வடகர பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கான நீர்வரத்து 313 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால், அணையின் நீர்மட்டம் 40.50 அடியில் இருந்து 42.50 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.