கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவனதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுமருதூர், பணிக்கம்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.