தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உணவகத்தை சூறையாடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கடலையூர் நெடுஞ்சாலையில், அருணாச்சலம் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் உணவகத்திற்கு வந்த ரவுடி மதன்குமாரிடம், பழைய பாக்கியை அருணாச்சலம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மதன்குமார், அரிவாளால் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், உரிமையாளர் அருணாச்சலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், உணவகத்தை சூறையாடிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.