திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த காவல் நிலையத்தின் பக்கவாட்டு சுற்றுச்சுவர் பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஆண் சடலம் கேட்பாற்று கிடந்துள்ளது.
உடலை கைப்பற்றி விசாரித்தபோது, உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மின் வாரிய ஊழியர் கார்த்திகைபாண்டியன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.