இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடி செய்பவர்களுக்கு சிம்கார்டு வழங்கும் மூளையாக செயல்பட்ட அப்துல் ரோஷனை மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம் கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் ஸ்கேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிம்கார்டு வாங்க சில்லறை கடைக்கு வரும் வாடிக்கையாளருக்கு தெரியாமல், அவர்களின் பயோமெட்ரிக் கைரேகையை இரண்டு அல்லது மூன்று முறை அழுத்தி போலி சிம்கார்டுகளை இவர் தயார் செய்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.