தமிழகத்தில் கோடைமழை 58 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட் டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமான கோடை மழை 83.4 மி.மீ., பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 35.2 மி.மீ தான் பதிவாகியுள்ளது. இதனால் கோடை மழை 58 சதவீதம் குறைவாக பெய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.