ஆர்.சி.பி.க்கு எதிரான நாளைய ஐபிஎல் போட்டியில் விளையாட டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்துவீசியதாக ஏற்கனவே இரண்டு முறை அபராதம் விதித்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 3 வது முறையாக தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் 30 லட்சம் அபராதம் விதித்து, ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான நாளைய போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.