தேனியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் சஜீவனா உள்ளிட்ட அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து, தோரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.