காரைக்காலில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.
திருநள்ளாறு பகுதியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர் மற்றும் தர்பூசணி பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. “கோடை காலம் முடியும் வரை தினமும் 500 நபர்களுக்கு நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்படும்” என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.