முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தீவிரவாதத்தை சகித்துக் கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக காங்கிரஸின் அணுகுமுறை மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் இருந்ததாக நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.