திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி ரயில்வே காவல் துறை சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ரயில் பயணங்களின் போது செய்யக்கூடாத செயல்கள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
ரயில் முன்பு செல்பி எடுப்பது தவறு உள்ளிட்டவை குறித்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில், ரயில்வே போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.