உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படுகின்றது.
அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை 6 மணிக்கு மேள தாளங்கள் முழங்க திறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அம்மா நில ஆளுநர் குர்மீத் சிங் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்ரிநாத் கோயில் திறக்கப்பட்ட இந்த புனிதமான நாள் என தெரிவித்தார். இங்கு வந்துள்ள பக்தர்கள் அனைவரையும் முழு மனதுடன் வரவேற்பதாகவும், அனைவரின் பயணம் நல்ல முறையில் அமைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.