ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய அவர், நான் 21 நாட்கள் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன் என்றும், ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அதன்பின்னர், ஆம் ஆத்மி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியது எம்.எல்.ஏ.க்களின் கடமை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளியே வந்த பின்னர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும்.