ஈரோட்டில் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் திண்டல் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.