தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வாக்காளர்கள் அனைவரும் பெரும் திரளாக வாக்களிக்க வரவேண்டும் என்றும் சிரஞ்சீவி அழைப்பு விடுத்தார்.
இதேபோல் ஹைதராபாத் jubilee hills வாக்குச்சாவடியில் இசையமைப்பாளர் கீரவாணி தமது வாக்கை பதிவு செய்தார்.