செலவு செய்ய தூண்டுகிறதா UPI? ஆய்வில் சுவாரஸ்யம்!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செலவு செய்ய தூண்டுகிறதா UPI? ஆய்வில் சுவாரஸ்யம்!

Web Desk by Web Desk
May 13, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இப்போதெல்லாம் நாடு முழுவதும் ஆன் லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. UPI மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் காரணமாக, 75% இந்தியர்கள் அதிக அளவில் செலவுகள் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவில் UPI மூலம் பணபரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகி விட்டது.
எந்த பொருள் வாங்கினாலும், ஒரு ரூபாயில் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை UPI பணப்பரிவர்த்தனை மூலம் அதற்கான பணத்தைச் செலுத்த மக்கள் பழகி விட்டார்கள். நேரம் விரையம் ஆவதில்லை.

ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு இருந்தாலும் உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. எங்கு சென்றாலும், கையில் பணத்தை எடுத்துச் செல்லவேண்டியதில்லை. போன் இருந்தால் போதுமானது. எனவே, பெரும்பாலான இந்திய மக்கள் UPI மூலம் பணம் செலுத்துவதையே விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக உலகிலேயே அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி இருக்கிறது.

இவ்வாறு UPI மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக, இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஆய்வு செய்து, அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான துருவ் குமார் மற்றும் அவரது இரண்டு மாணவர்களான ஹர்ஷல் தேவ் மற்றும் ராஜ் குப்தா ஆகியோர் UPI உண்மையில் மக்களின் செலவுப் பழக்கத்தை மாற்றிவிட்டதா என்பதைக் கண்டறிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், UPI மற்றும் பிற டிஜிட்டல் முறைகளினால் பணம் பரிமாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது என்பதாலேயே, இந்திய மக்களின் செலவு செய்யும் போக்கிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுளள்து என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சுமார் 91.5% மக்கள் UPI மூலம் பணம் செலுத்துவது எளிதாக இருக்கிறது என்று கூறியுள்ள நிலையில், மேலும் 81% மக்கள் நாள்தோறும் UPI முறையை பயன்படுத்தி, சராசரியாக ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

National Payments Corporation of India (NPCI)யின் தகவல் படி . கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் UPI மூலம் 19.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 13.3 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது 2023 ஆண்டை விட , 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு UPI பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மக்களின் செலவு செய்யும் போக்கு குறித்தும் இந்த ஆய்வு முக்கிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. கைகளில் பணத்தை எடுத்து பயன்படுத்தாத காரணத்தால், அதிக செலவுகளை மேற்கொள்வதாக கூறும் இந்த ஆய்வு அறிக்கை, அந்த செலவுகளில் பெரும்பான்மை தேவைற்ற செலவுகளாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 75% மக்கள் UPI மற்றும் பிற DIGITAL PAYMENT முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகமாக செலவு செய்கின்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

UPI மீதான முழு திருப்தி இருந்தபோதிலும், பட்ஜெட் கடைப்பிடிப்பதற்கும் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக இருப்பதைப் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

UPI பண பரிமாற்றம் மக்களை அதிகமாகச் செலவழிக்க வைத்திருந்தாலும், சிறு மற்றும் குறுந் தொழில், சில்லறை வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும் UPI பணபரிமாற்ற முறை நிச்சயமாக உதவுகிறது என்று தெரிவித்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை UPI பண பரிமாற்றத்தின் காரணமாக இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிக் கொண்டு வந்துள்ளதோடு, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கி விட்டது என்றே சொல்லலாம்.

Tags: Does UPI encourage spending? Interesting study!
ShareTweetSendShare
Previous Post

வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம்! – எஸ். ஜெய்சங்கர்

Next Post

சீனாவுக்கு இந்தியா “செக்” : பளபளப்பாகும் எல்லையோர கிராமங்கள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies