ஏற்றுமதியில் உச்சம் தொடும் இந்தியா!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்றுமதியில் உச்சம் தொடும் இந்தியா!

Murugesan M by Murugesan M
May 14, 2024, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 900 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுவதாக ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலை மாறி உலக அளவில் உச்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025ம் நிதியாண்டிற்கான நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக ஆகக் குறையும் என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார்.

செங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொள்ளையர் தாக்குதல் காரணமாக பல நாடுகளின் ஏற்றுமதி வருவாய் வெகுவாக குறைந்துள்ள போதிலும், இந்தியா ஏற்றுமதித் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐரோப்பிய நாடுகளுக்கான தேவைகளில் சரிவு ஏற்பட்ட நிலையிலும், லத்தீன் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை இந்தியா தொடங்கியிருப்பதை முக்கிய வெற்றியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) இயக்குநர் அஜய் சஹாய் கூறும் போது, இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி 500 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வளரும் என்றும் அதேபோல் , சேவைகள் ஏற்றுமதியும் 400 பில்லியன் அமெரிக்க டாலராக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 238 நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில்,115 நாடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் , 46.5 சதவீதம், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சீனா,பிரிட்டன், சவூதி அரேபியா, சிங்கப்பூர்,வங்கதேசம், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 115 நாடுகளிலிருந்து கிடைக்கிறது என்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மென்பொருள் துறை உள்ளிட்ட சேவை துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, சரக்கு ஏற்றுமதியில் கவனம் செலுத்த தொடங்கியது என்று தெரிவிக்கும் அந்த அறிக்கையில், பொறியியல், மின் சாதனங்கள், மருந்துகள், பருத்திநூல், துணிகள், கைத்தறி பொருட்கள் போன்ற 17 துறைகளின் பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் மருந்து துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர தொடங்கியிருப்பதைக் குறிப்பிடும் ஏற்றுமதித் துறையைச் சார்ந்த வல்லுநர்கள், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதாகவும், அது நடக்கும் நேரத்தில், இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆடைகள் துறையைப் பொறுத்தவரை, அமெரிக்கா, பிரிட்டன் என்று மட்டும் இல்லாமல், பிரேசில், போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சி எடுத்திருப்பதாக, அந்த துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுலா துறையிலும் குறிப்பாக கோயில் மற்றும் கலாச்சார சுற்றுலா துறை மூலமும் இந்தியா தனது ஏற்றுமதி வருவாயை உயர்த்தி வருவதைச் சுட்டிக்காட்டும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) இயக்குநர் அஜய் சஹாய், பாரம்பரிய முறைகளை விட்டு விலகி, மதிப்புக் கூட்டிய பொருட்கள், புதிய யுக்திகளைப் பயன்படுத்தி இந்தியா ஏற்றுமதி துறையில் வெற்றி பாதையில் செல்கிறது என்று விளக்கியுள்ளார்.

2030ம் ஆண்டிற்குள் இரண்டு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, சேவை ஏற்றுமதியோடு, மின்னணுவியல், பொறியியல், மருந்து மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ள அனைத்து துறைகளின் ஏற்றுமதியாளர்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள், இதை பார்க்கும் போது ,2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவது நிச்சயம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

Tags: India reaches peak in exports!
ShareTweetSendShare
Previous Post

சீனாவுக்கு இந்தியா “செக்” : பளபளப்பாகும் எல்லையோர கிராமங்கள்!

Next Post

10-ஆம் வகுப்பு: ஜூலை 2-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறும்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies