பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி சென்னை ஐஐடி சாதனை!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி சென்னை ஐஐடி சாதனை!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதை வடிவமைத்த சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..!

சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உட்பட உலக நாடுகள், தொடர்ந்து புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும் ,அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதிலும் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம்.

வெறும் கனவு என்று சொல்லப்பட்ட பறக்கும் டாக்சியை சாத்தியமாக்கி இருக்கிறது சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம். மேலும் அடுத்த ஆண்டுக்குள் இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

eVTOL (Electric Vertical Takeoff and Landing) பறக்கும் டாக்சியை e-Plane என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் முதல் கச்சிதமான பறக்கும் மின்சார டாக்ஸியை உருவாக்கும் நோக்கத்துடன், 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியின் முன்னாள் பொறியியல் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தியால் ePlane நிறுவனம், சென்னை ஐஐடியில் தொடங்கப் பட்டது.

எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) விமானங்களின் டெவலப்பரான ePlane நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DOA) பெற்றுள்ள பறக்கும் டாக்சி, மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

நகர்ப்புறங்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள e200 என்ற இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியில் இருவர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கும் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி, சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியுடன் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரியை, ஒரு தடவை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர்,இந்த டாக்சி தரையில் இறங்கவும், மீண்டும் கிளம்பவும்,15 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது என்றும் விளக்கியுள்ளார். இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிலோமீட்டர் துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடலாம்.

சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா, “சென்னை ஐஐடி உருவாக்கிய பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக, இனி புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் கூற முடியாது” என்றும் தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவு செய்துள்ளார்.

Tags: Flying Electric Taxi Chennai IIT feat!
ShareTweetSendShare
Previous Post

தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!

Next Post

பிரதமரிடம் வேட்பு மனுவை பெற்ற தமிழக அதிகாரி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies