நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் கொடியேற்ற விழா விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.