உத்தரகாண்டிலுள்ள கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ருத்ர பிரயாக்கில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலின் நடை, குளிர்காலத்தை தவிர எஞ்சிய 6 மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும்.
கேதார்நாத் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 10-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த 4 தினங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து கேதார்நாத்திற்கு பக்தர்கள் வருகை தருவர் என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.