ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர், தனிநபர் எண்ம தரவு பாதுகாப்பு சட்டத்தைப் போல, புத்தாக்க நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏஐ விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று கூறினார்.
இதன் மூலம் தனிநபரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, நாட்டில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவது எளிதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.