வருகிறது வந்தே மெட்ரோ ரயில்: அஷ்வினி வைஷ்ணவ் அசத்தல்
Aug 22, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருகிறது வந்தே மெட்ரோ ரயில்: அஷ்வினி வைஷ்ணவ் அசத்தல்

Web Desk by Web Desk
May 19, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை மிக பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு வந்தே மெட்ரோ இரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

மும்பையில் நடைபெற்ற விக்சித் பாரத் தூதர் நிகழ்வில் கலந்த கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2014ம் ஆண்டுக்கு முன், காங்கிரஸ் ஆட்சிகளில் ‘கறவை மாடு’ என்று கிண்டல் செய்யப்பட்ட இந்திய ரயில்வே துறை, பிரதமர் மோடி ஆட்சியில் அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

மேலும், மெய்சிலிர்க்க வைக்கும் வகையில், இந்திய ரயில்வே துறையில் என்ன என்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன? எப்படி அமைக்கப்பட்டன? எவ்வாறு ஒரு பெரிய பரந்த அளவிலான மின்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்திய இரயில்வே மாற்றப்பட்டது ? என்பதை என்பதை எல்லாம் விரிவான விளக்கக்காட்சிகளுடன் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

இந்தியாவில் இன்று ஒரு நாளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு இரயில் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன என்று கூறிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த நிதியாண்டில் மட்டும், சுவிட்சர்லாந்தின் ஒட்டு மொத்த இரயில் தடங்களுக்கு சமமாக 5,300கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவில் இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறியிருக்கிறார். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில், ஜெர்மன் நாட்டின் மொத்த இரயில் பாதைகளுக்கு சமமாக 31,000 கிலோ மீட்டர் இரயில் வழித்தடங்கள் இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இரயில்வேயின் மின்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலை எடுத்துரைத்த அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 20,000 கிலோ மீட்டருக்கு மின்மயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கிலோ மீட்டருக்கு ரயில்வே நெட்வொர்க்குகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறை 100 சதவீத மின்மயமாக்கலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், இதுவரை 95 சதவீதம் மின் மயமாகி விட்டதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 120 ரயில் நிலையங்களுடன், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , வந்தே பாரத் இரயில்கள் மற்றும் புல்லட் ரயில்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சியாகும் என்று கூறினார்.

மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடியின் முதல் 100 நாள் திட்டத்தில் வந்தே மெட்ரோ இரயில் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே மெட்ரோ இரயில்கள்’, 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் ‘வந்தே சேர் கார்’ மற்றும் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் ‘ வந்தே ஸ்லீப்பர் இரயில்கள் ‘ என்று வந்தே பாரத் இரயில்கள் மக்களுக்கான வசதியான பயணத்தை மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில் இனி காத்திருப்பு டிக்கெட்டுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருக்கிறார்.

சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நகரங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் மக்கள் சென்றுவர உதவும் ரயில் போக்குவரத்தே நாட்டின் முதுகெலும்பு என்றால் மிகையில்லை .

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் இரயில்வே துறை இவ்வளவு முன்னேற்றங்களை அடைந்துள்ளது நல்ல அறிகுறியே என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Coming Metro Rail: Ashwini Vaishnav is amazing
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்! – அமித்ஷா

Next Post

சுகபோக வாழ்வு தரும் திருவாடானை கோயில்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies