காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனியே 5 தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணன், திருநள்ளாறு எம்எல் ஏ சிவா உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தியாகேசா தியாகேசா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும், வரும் 21ம் தேதி தெப்போற்சவம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.