மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே மாதம் 22-ம் தேதியன்று தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் தொடங்குகிறது.
கேரளா, கர்நாடகா தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதியளவில் தொடங்குவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மாலத்தீவு, குமரிக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.