திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அரியவகை ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கரையோரம் நின்று பாதுகாப்பாக புனித நீராட பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.