நாகையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நத்தையம் பகுதியை சேர்ந்த 17 பேர் வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் சுற்றுலா சென்று மீண்டும் கேரளாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திருக்குவளை அருகே வயலில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் பயணித்த ஓட்டுநர் உள்பட 17 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.