ஈரோட்டில், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 10-ம் தேதி வைகாசி விசாகத்தை ஒட்டி கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிலையில் ஸ்ரீ வருணாம்பிகா சமதே ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.