தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபாண்டி – கூரியம்மாள் தம்பதியினர், இந்நிலையில் கூரியம்மாள் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகறாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட சண்டையில் அழகுபாண்டி, கூரியம்மாளை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கூராய்விற்கு அனுப்பி வைத்து அழகுபாண்டியை கைது செய்து சிறையிலடைத்தனர்.