சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!
Aug 2, 2026, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கேசினோ திரையரங்கு அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமன்றி பணம் எடுத்துவரப்பட்ட அறிந்த அதிகாரிகள், தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மின்சார துறையில் பணியாற்றி வந்ததும், சென்னைக்கு மனைவி மாற்றுதல் ஆனதால் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்காக தம்பதியை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, தாம் இன்றே பணியில் சேர வேண்டும் என்று கூறிய பெண் ஆர்டரை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க காண்பித்தார்.

இதேபோல், பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 12 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ண சாமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

கரூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொச்சகொட்டாம் பாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். கரூர் பெரிய குளத்து பாளையத்தை சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஓட்டி வந்த காரில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags: tamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026tamil nadu election pulsetamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysiscash 65000 seizedFlying Squad
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies