தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக வேட்பாளர் சுகன்யா, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், தேர்தல் பொறுப்பாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தாராபுரம் மக்கள் தெளிவாக இருப்பதாகவும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் வேட்பாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
















