வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனதே மின்தடைக்கு காரணம் என மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் வேலூர் அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால், அவர் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பேட்டியளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
















