விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழத்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது : நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் துயரங்களையும் நீக்கி, நம் வினைகள் அனைத்தையும் தீர்த்து, வெற்றி, வளம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை அருளும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்கும் இப்புனித நன்னாளில், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும், நல்ல சிந்தனையும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.
தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையவும், இல்லங்கள் அனைத்திலும் அன்பும் அமைதியும் செழிக்கவும் விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம் என தெரிவித்தள்ளார்.
















