டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அவரது இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று விநாயகருக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
















