மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நவீன முறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பாபிஷேகத்திற்காக அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கும்பாபிஷேக விழாவுக்காக 2 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
















