மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சி வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், மதுராந்தகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் பரந்தாமன், மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், மக்கள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
















