ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தானாக ரத்தாவதாக வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உண்மை உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு 6,000 சிறப்புப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 48 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் இடையூறின்றி பயணிக்க சிறப்பு பேருந்து இயக்கப்படும் எனவும் கூறினார்..
















