யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறான வீடியோ வெளியிட்டதாக, வார இதழ் நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றும் இளம்பெண், காவல்துறையிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் வார இதழ் நிருபர் தாமோதரன் பிரகாஷ் , தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய்யான மற்றும் அறுவெறுக்கத்தக்க தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, BNS, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் தாமோதரன் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















