புகழ்பெற்ற மங்கை வள்ளி கும்மி குழுவின் 128 வது அரங்கேற்ற நிகழ்ச்சி ஈரோடு மாவட்டத்தின் அத்தப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வள்ளிகும்மியாட்டத்தை அரங்கேற்றினர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஒரே நிற ஆடை அணிந்து கும்மியடித்து ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.