சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஒருநாளும் செயல்பட்டதில்லை என்றும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக தற்போது மட்டுமல்ல எப்போதும் நடந்து கொண்டது இல்லை என தெரிவித்தார்.
சிறப்பு பிரிவினர் என யாரையும் அழைப்பதை விரும்பவில்லை என்று தாம் கூறியதாகவும், ஆனால் அதனை எதிர்கட்சிகள் திரித்து கூறுவதாகவும், பிரதமர் மோடி கூறினார்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை என கூறியுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிக்கு சிறுபான்மை இன மக்கள் பலியாகி விடக்கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தென்மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளை வெல்லும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.