கனடாவில் பிரின்ஸ் எட்வர்டு ஐலேண்ட் மாகாணத்தில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டதால், இந்திய மாணவர்கள் 2-ஆவது வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இதே நிலை நீடித்தால் இந்தியா திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்றும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை என மத்திய வெளியுறவுத் துறை செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.