மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையர் கூட்டம் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு 100 மேற்பட்ட விவசாயிகளுடன் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.