சிவகங்கையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த நிதீஷ், தனது வீட்டின் அருகேயுள்ள கடையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நிதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த நிதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.