சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் என்பவர், கடந்த 18-ம் தேதி சைதாப்பேட்டை துரைசாமி கார்டன் இரண்டாவது தெருவில் உள்ள தனது சகோதரி கன்னியம்மாளின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் பலியான நிலையில், லேசான காயத்துடன் கன்னியம்மாள் உயிர் தப்பினார்.