இலவச பேருந்து பயணம்! - மெட்ரோ வருவாய் இழப்பு!
Nov 16, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச பேருந்து பயணம்! – மெட்ரோ வருவாய் இழப்பு!

Web Desk by Web Desk
May 21, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், ஐதராபாத் மெட்ரோவை 2026ம் ஆண்டுக்குப் பிறகு விற்க முடிவு செய்திருப்பதாக அதை நிர்வகிக்கும் L&T நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

மெட்ரோ இரயில் திட்டம் என்பது நகரங்களின் வாகன நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. பெரிய பெரிய நகரங்களின் இயங்கும் இந்த மெட்ரோ இரயில் சேவை முதன் முதலாக லண்டனில் கொண்டுவரப் பட்டது.

தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளில் மெட்ரோ திட்டம் விரிவடையத் தொடங்கியது.

இந்தியாவில் கொல்கத்தாவில் முதல் மெட்ரோ வந்தாலும் கூட , டெல்லியின் முதல் மெட்ரோ இரயில் 2002ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வந்தாலும் , மெட்ரோ நிறுவனங்கள் இன்னமும் லாபம் பெறவில்லை என்பதே கசப்பான உண்மை .

ஏன் மெட்ரோவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை L&T நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன் சொல்லிருக்கிறார்.

ஹைதராபாத் மெட்ரோ இரயில் திட்டத்தில் 90 சதவீத பங்குகளை L&T நிறுவனமும் மீதமுள்ள 10 சதவீத பங்குகளை தெலங்கானா அரசும் கொண்டுள்ளன.

தெலங்கானா காங்கிரஸ் அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனாலேயே, மெட்ரோவில் பெண்கள் பயணிப்பது குறைந்து விட்டதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால், நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது.

ஹைதராபாத்தில் கடந்த நவம்பரில் 5.50 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது 4.80 லட்சமாக குறைந்துள்ளது முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த L&T நிறுவன தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன், ஹைதராபாத் மெட்ரோவின் பங்குகளை 2026க்குப் பின் விற்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

13000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஹைதராபாத் மெட்ரோ, தெலங்கானா அரசிடம் வட்டியில்லா கடனாக 3000 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், மெட்ரோவின் சில நிலங்களை விற்று நஷ்டத்தை சரி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலவசத் திட்டங்கள் மாநில கஜானாவை எப்படிக் கெடுக்கின்றன என்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்கள் நிதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், இலவசங்களை அறிவித்து மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்காக அரசுக் கஜானாவை காலியாக்க எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை என கடுமையாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துள்ளன.
பிரதமர் மோடி தெரிவித்தது போல , ‘ ஒரு நகரத்தில் மெட்ரோவை நிர்மாணித்து, நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி ஒருபுறம் வேகமாக அதிக முதலீட்டில் நடைபெற்றுவருகின்றன.

அதே சமயம் ,இன்னொரு புறம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதியளிக்கும் மாநில அரசுகளின் திட்டங்கள் மெட்ரோவின் நஷ்டத்துக்கு மட்டுமின்றி ,நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Free bus travelthe metro is selling at a loss!Free bus ride! - Metro revenue loss!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம்! – அமித்ஷா

Next Post

எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

Related News

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies