நேபாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா ஷெர்பா 30-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக கடந்த 9 நாட்களுக்கு முன்பு காமி ரீட்டா ஷெர்பா இமயமலைக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, காலை 7.49 மணிக்கு காமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 30வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளதாகவும், ஏற்கனவே காமி ரீட்டா படைத்துள்ள சாதனைகளை அவரே மீண்டும் முறியடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளன